சிந்தனைத் துளிகள்
167
1653. “உடல் இயங்குகிறது; ஆனால் நாம் இயங்குவதில்லை.”
1654. “ஏதாவது ஒரு ஆவேசம் வந்தாலன்றி பணிகளின் தொடக்கம் வராது.”
1655. “நாமே செய்வது-நற்பயன் தரும்.”
1656. “மெதுவாகச் செய்தாலும்-தொடர்ச்சி இருந்தால் பயன் கிடைக்கும்.”
1657. “திட்டத்துக்காக வாழ்க்கையல்ல - வாழ்க்கைக்காகவே திட்டம் உருவாகிறது.”
1658. “ஆர்ப்பரவம் மக்களை ஈர்ப்பதால்-எங்கும் ஆர்ப்பரவம் நடைபெறுகிறது.
1659. “அரசியலில் புதுமுகம் காண்பதரிது.”
1660. “உன்னைப் புகழ்கிறவர்கள்-உனக்குக் கேடு செய்கிறார்கள்.”
1661. “கல்வெட்டுகள் மூலம் நினைவைப் பராமரிப்பு என்பது-அவர்களிடம் உண்மை இல்லை என்பதன் அடையாளம்.”
1662. “எதிர்மறை இயக்கங்கள் அழிக்கும்; ஆக்கம் செய்யா?”
1663. “எதிர்மறை இயக்கங்கள் எதிர்ப்புக்குரியன மறைந்துவிட்டால் ஒரு சூன்யத்தை உருவாக்கும்.”
1664. “எந்த ஒரு நன்மையும் தீமையும் ஒரு நாளில், ஒரு பொழுதில் தோன்றுவன அல்ல.”
1665. “வாழ்க்கையை வியாபாரமாக அனுமதித்தல் தற்கொலையாகும்.”
1666. “சாக்கை நனைத்துத் தூக்கிக் கொண்டு போதலை ஒக்கும், அறிந்தும் துன்பத்தைச் சுமத்தல்."