சிந்தனைத் துளிகள்
171
1699. “பணம் பத்தும் செய்யும் என்பதை நிரூபணம் செய்வதே வரலாறு.”
1700. “இந்தியா ஒரு நாட்டு” உண்மையேயாயினும் இன்றிருப்பது போல் ஒரு நாடு அமைப்பு இருக்கக் கூடாது.”
ஒரு நாடு
ஒரே மாநிலம் ஆட்சி செய்கிறது;
ஒரே மொழி ஆட்சி செய்கிறது;
ஒரே மதம் ஆட்சி செய்கிறது.
ஒரே குடும்பம் ஆட்சி செய்கிறது.
1701. “சாமார்த்தியம் வந்தமையும் அளவுக்கு வாய்மை வந்து பொருந்துவதில்லை.”
1702. “எந்த ஒரு பணியும் அடித்தள மக்களின் மேம்பாட்டுக்கு உதவாவிடில் அது பணியல்ல; ஒரு வகையான வணிகமேயாகும்.”
1703. “சுய விருப்பத்தால் செய்யப் பெறும் பணியே அறம் சார்ந்த பணி.”
1704. “உயர் குறிக்கோளுக்கு உரிமையாக்கிக் கொள்ளாதோர் - தட்டச்சு இயந்திரம் போலப் பணி செய்பவர். பயன் இராது.”
1705. “உயர் குறிக்கோள் இலாதார் சிறப்புறும் பணிகளை செய்யார்; அதே போழ்து பிழைகளும் செய்வர்.”
1706. “உள் வளர்ச்சியும் அதாவது ஆன்மாவும் வளர்ந்தால்தான் - கல்வி - கேள்வி பயனுறும்.”
1707. “ஒருவருடைய கண்கள் - காதுகள் அறிவார்ந்த நிலையில் சுமூக உணர்வில் இயங்கினாலேயே