பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

175



1741. “தைரியமாக நாட்குறிப்பு எழுதிக் காட்டி ஊதியம் வாங்குபவர்கள் வேசிகளிலும் கொடியர்.”

1742. “செய்த பணியின் அளவு கடுகு, கால தாமதம் மிகுதி. பயனோ எதிர்மறை. இப்படி வேலை பார்த்தால் எப்படி வளர்ச்சி தோன்றும்.”

1743. “தனக்குத் தொடர்பில்லாத செய்தியை அறிய விரும்புதல் அதை மற்றவர்களிடம் கூறுதல் ஆகியன மோசமான மனிதர்களின் செயற்பாடு.”

1744. “செவ்வி பார்க்கத் தெரியாதவர்-ஒன்று மூர்க்கர்; அல்லது சுயநலவாதிகள்.”

1745. “ஒருமுதல் வளர்ந்தால்தான் வளர்ச்சி.”

1746. “ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கால் வைத்து நடப்பது நடை. ஒன்றன்பின் ஒன்றாக செயற்படுவது நடை-ஒழுக்கம்.”

1747. “முட்டையிடும் வாத்தைக் கொன்றது, அன்று கதை; இன்று யதாரத்தமான வாழ்க்கை.”

1748. “மக்கள் மறப்பதில் வல்லவர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் அரசியல்வாதிகள் பேசுகின்றனர்.”

1749. “ஒரு பணியை அறிவார்ந்த ஆய்வுடனும் முழுமையான பயன்பாட்டு நோக்குடனும் செய்தால் முழுமையான பயன் விளையும்.”

1750. “கால தாமதங்கள் பல இழப்புக்களைத் தந்துள்ளன.”

1751. ஆரியத் தினை அகற்றி அந்த இடத்தில் தமிழை வைக்கவேண்டும்-அப்படியல்லாது ஆரியம் போன்ற ஒன்றை தமிழில் செய்து வைப்பதில் என்ன பயன்.” .