பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

179



1779. “நட்பு-காதல் அர்ப்பணிப்புத் தன்மையுடையன. அதனால், தன்னலம் பேணுதல் இருக்காது.”

1780. “தி.மு.கழகத்தினர், தங்களுடைய சுவரொட்டியில் எம்.ஜி.ஆரை வெற்றிபெறச் செய்து விட்டனர்.”

1781. “நகரத்தாரிடம் பெண்மையைப் பேணும் இயல்பு உண்டு.”

1782. “குறைவான இலக்கு நிர்ணயிப்பது உள்ளதையும் கெடுத்துவிடும்.”

1783. “பெரும் பொறுப்புக்களில் இருப்பவர்கள் எண்ணிக்கையில் “ஒருவர்” ஆனாலும் சமூகத்தின் மதிப்பீடு தருதல் வேண்டும்.”

1784. “விளம்பரம் என்பது விரும்பத்தக்க ஒன்று அல்ல.”

1785. “அரசாங்கம் குடிமக்கள் நிலையிலும், தனிப்பட்ட முறையிலும், சமுதாய நிலையிலும் செய்ய இயலாதனவற்றைச் செய்தல் வேண்டும்.”

1786. “வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்காத அரசுக்கு தண்டனை தர உரிமையில்லை.”

1787. “முன்னணியில் நிற்பது என்பது முந்திரிக் கொட்டை மாதிரி நிற்பதாகாது. முந்திரிக்கொட்டை மாதிரி நிற்பது முன்னணியில் இருப்பதாக ஆகாது.”

1788. “சுவைமிக்க பருப்பை உள்ளிடாக உடைய முந்திரிக் கொட்டை, பழத்தின் சுவை உடன்படாமையால் பழத்தினின்று பிரிந்து வெளியே வந்துவிட்டது. ஆனாலும் பிறந்த பாவத்திற்காக உறவு நிலையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.”