பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தவத்திரு அடிகளார்



1789. “சமூகத்தை அனைத்து வளர்த்தல் கடுமையான பணி. இந்தப் பணிக்கு கோபமே ஆகாது; கூடாது.”

1790. “ஒருவர் தன் வாழ்க்கையில் பாதிக்கப் படும்பொழுது அரண் தேடுவர். ஆனால் அவர்கள் பாதிக்கும்படி காரியங்களைச் செய்வார்.”

1791. “அரசுகளின் அதிகாரங்களையும் விடக் கூடுதலான அதிகாரம் பெற்றது சமூகத்தின் மனப் போக்கும், பழைய பழக்கவழக்கங்களும்!”

1792. “கண்ணகியால் பாண்டிய அரசை எதிர்க்க முடிந்தது. ஆனால் பூம்புகார் நகர மக்களின் பழக்கத்தை மாற்ற முடியவில்லை.”

1793. “கணவன் - மனைவி சண்டையில் குழந்தைகளையும் கையில் கொடுத்து, விரட்டுவது என்ன நியாயம்?”

1794. “என்ன வேலை செய்தோம் என்பதைக் கூறியும் காட்டியும் நிரூபணம் செய்ய இயலாதவர்கள் கூலியை எண்ணிக் கேட்பது என்ன நியாயம்.”

1795. “எந்தவிதத் தகுதியும் இல்லாத ஒருவன் கணவனாகிவிட்டால் அவனுடைய மனைவியை அவன் அடிமையெனக் கருதி நடத்தும் மனப்போக்கில்தான் பெண்ணடிமைத்தனம் இருக்கிறது.”

1796. “தன்னுடைய செயல்களுக்கு விளக்கம் கூற இயலாதவர்கள் கோபப்படுவார்கள்.”

1797. “மருமகள் என்ற உறவு முறையை அமைத்தும் மாமியார்களின் மனம் இறங்கவில்லை.”

1798. “ஒரு எளியவனிடத்தில் கூட நான் அப்படித்தான் செய்வேன்” என்று சொல்லக் கூடாது.