பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தவத்திரு அடிகளார்



1805. “ஆசையில் விளைவது அனைத்தும் அவலமே.”

1806. “வன்மமும் வளரும் தன்மையதே. தோல்விகளாலும் அறிவுரைகளாலும் கூட வன்மமுடையவரை மாற்றுதல் அரிது.”

1807. “தீமையில் எல்லாம் தீமை’ வன் கண்மையே!”

1808. “இன்றும் பேச்சு, எல்லோருக்கும் சமநிலை வாழ்வு. நடப்பது வல்லாங்கு வாழ்வோருக்கு வாழ் வளித்தலே.”

1809. “இன்று கையூட்டு வாங்குபவர்கள் ஒளிவு மறைவுடன் வாங்குவதில்லை. வெளிப்படையாகவே விகிதம் விதித்து வரிபோலத் தண்டுகின்றனர்.

1810. “இந்த நூற்றாண்டு செய்த மகத்தான சாதனை, கையூடுடை தேசியமயப்படுத்தியது.”

1811. “ஒத்த நோக்கு, ஒத்த செயல், ஒத்த திறன் உடையோராக நட்பு கிடைத்தல் அரிது.”

1812. “பரிவுணர்வுகள் தண்ணீரைப் போலத் தான், வளர்ச்சிக்குத் துணை செய்யும். பரிவு உணவாக அமைந்து உதவி செய்யாது.”

1813. “காரணங்களே இல்லாமல் மோதிக்கொள்ளும் அளவுக்கு அறியாமை வளர்ந்திருக்கிறது.”

1814. “படித்தவர்கள் கூட காரண காரியங்களை ஆராய்ந்து பிரச்சனையை, தீர்வுக்கு வழி காணாமல் வளர்த்துவிடுகிறனர்.”

1815. “இருவேறு அணியினர் என்ற நிலை உருவான பிறகு, நடுவுநிலை அணி ஒன்று இல்லாது போனால் வம்பு வளரும்.”