பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

183



1816. “இம்! என்றால், சாதி, கடுசி அடிப்படையில் கூடுவது விரும்பத் தக்கதல்ல.”

1817. “இன்று மக்கள், வாக்க்ாளர்கள் குறை, நிறை பார்த்து வாக்களிப்பதில்லை. அவர்கள் விருப்பம் போல.“

1818. “கடந்த காலத் தவறுகளை மக்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணியே பல அரசியல் தலைவர்கள் உலா வருகிறார்கள்.”

1819. “பச்சையாகச் சொல்வதுதான் பலருக்கும் புரியும். பண்பட்ட மொழியில் சொல்வது புரிவதில்லை. ஒரு வகையான பாமரத் தன்மை.”

1820. “ஒரு தீமையைக் கண்டிப்பது மட்டுமே போதாது. தீர்வும் காட்ட வேண்டும்.”

1821. “தீமையுடைய நபரைக் கண்டித்தால் வரவேற்கிறவர்கள், தீமையைக் கண்டித்தால் வரவேற்க முன்வருவதில்லை, இவர்கள் நபரைப் பற்றியே கேட்டுப் பழகியவர்கள்.”

1822. “முன்பே கேட்டு பழகிய செய்தியை மனத்தில் வைத்துக் கொண்டே கலந்து பேச முன்வருபவர்கள் ஆய்வு மனப்பான்மை இல்லாதவர்கள்.”

1823. “உச்சந்தலை உரோமம் முதல், உள்ளங்-கால் வரை உயிர்ப்பு நிலை இருக்கிறது. உள்ளங் காலில் எறும்பு ஊரினாலும் உடன் செய்தி தலைக்குப் போய் தலை கையை அழைத்து தள்ளு என்று அறிவுறுத்தும். அதுபோல ஒரு இயக்கம் அதன் கிளைகளிலும், இருக்கவேண்டும்.

1824. “சமூக வாழ்க்கையில் மாறுதல் காண விழையாமல் புறத்தே சின்னங்கள் அமைப்பதிலேயே பலர் முனைகின்றனர். இது ஒரு உண்ர்ச்சி”.