பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

185



1835. “வேதனை, ஊக்கமுடையோருக்கு படைக்கும் ஆற்றலையே தரும்.”

1836. “அனைத்தும் இருந்தும் சிறப்பாக வாழாதோர் கொடுத்து வைக்காதவர்கள் என்று சொல்லித் தான் அழவேண்டியிருக்கிறது.”

1837. “வரவுக்குள் செலவு” என்பது தற்காப்பு யுக்தி. ஆனால் வரவுக்கு எல்லை கட்டக்கூடாது.”

1838. “நல்ல பணி வெளியே தெரிந்தவுடன் அவரவர் ஊருக்குச் செய்யும்படி கோருவார்கள்; அதன் அடிப்படையை அறியாமலே.”

1839. “வங்கியில் இட்டு வைப்பதும் இன்று அறமேயாகும்.”

1840. “வெப்பம் நிறைந்த நிலப்பகுதிகளில் எண்ணெய்க் குளியல் இன்றியமையாததே.”

1841. “உணவும் உழைப்பும் அளவாகக் கிடையா விடில் நோயேயாம்.”

1842. “வேலையைத் தேடிச் செய்யாமல் கையில் வந்த வேலையைச் செய்பவர்களால் உடனுறை எழுத்தர்களாக இருப்பது சாத்தியமில்லை.”

1843. “எந்த ஒரு பணியையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும் விழைவு தேவை.”

1844. “விழித்திருத்தல் என்பது ஆயத்த நிலையில் இருப்பதையே குறிக்கும்.”

1845. “எப்போதும் ஆயத்த நிலையில் பிணிப்பு இல்லாதவர்களிடமிருந்து பலமணித் துளிகள் நழுவி விடும். காலத்தையும் செய்த வேலையையும் கனக்கிட்டுப் பார்க்க முடியாது."