பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தவத்திரு அடிகளார்



1898. “ஒரு மாதமாக இரவு பகலாக உழைத்ததற்கு தமிழ் நாட்டு மக்கள் கொடுத்த பரிசு” இதுதான் என்றால் தமிழ் மக்களுக்காகவா உழைத்தார்கள்? தங்கள் கட்சிப் பதவிக்கு வரத்தானே உழைத்தார்கள். கட்சிக்கு உழைப்பதற்குப் பரிசு மக்கள் எப்படி தருவார்கள்?”

1899. “ஜனதாவில் சில உயர்ந்த மரபுகளுடைய பெரிய அரசியல் மேதைகள் உள்ளனர். அவர்களும் பாராளுமன்றத்திற்கு வராதது ஏமாற்றத்தைத் தருகிறது. பிரதமர் ராஜிவ் இவர்களை ராஜ்ய சபைக்கு வர ஏற்பாடு செய்தல் நல்லது.”

1900. “நமது நாட்டு மக்களுக்குப் பணத்தில் உள்ள ஆசையை, பொருள்கள் மீதாக மடை மாற்ற வேண்டும்.”

1901. “கிராமங்களின் வளம் முடங்கிக் கிடக்கிறது.”

1902. அரசியல் வெறியும் நல்லதல்ல.

1903. “நமக்கு வேண்டியவர்கள் நமது வளர்ச்சிக்குத் துணை செய்ய வேண்டுமே தவிர சலுகைகள் தரக்கூடாது.”

1904. “மிதமாக உண்டால், கடுமையாக உழைத்தால், ஆன்மா சமநிலையில் இருந்தால், எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.”

1905. “நாம் நாகரிகமாக நடந்து கொள்வதால் தோற்கலாம். ஆனால் கொல்லைப்புற வெற்றிகள் தோல்வியையே தரும்.”