30
தவத்திரு அடிகளார்
215. “திருடர்”கள் மான அவமானத்துக்கு அஞ்சிய சமுதாயத்திற்குத் தரும் தொல்லை அளப்பில”.
216. “சீனாவைப் போல சராசரி மனிதனின் வருவாய்க்கு ஏற்ப, வாழ்க்கை நுகர்வுகள் அமையா தொழியின் ஒழுக்கங்களைக் காண்பது இயலாது”.
217. “இன்றையச் சூழ்நிலை திருடனைவிட, திருட்டுக் கொடுத்தல் அஞ்சச் செய்கிறது. இஃதொரு பரிதாபமான நிலை. ஆனால் இந்த நிலை தவிர்க்க இயலாதது. பொதுவுடைமைச் சமுதாயம் அமைந்தால் இந்த நிலை மாறலாம்”.
218. “ஏரியில் வீழ்ந்த துரும்பின் கதியே வஞ்சனை மனவலையில் வீழ்ந்த மனிதனின் கதியும்”.
219. “உடல் சுற்றிய ஆடையே உன் மானம் காக்குமா? உயர் ஒழுக்கமே உன் மானம் காக்கும்”.
220. “வாய் வேலை செய்யத் தவறியதில்லை. ஒயாது ஓவர்டைம் கூட வேலை பார்க்கிறது. காதுகள் இரண்டும் கடமையைச் செய்கிறது. அதனால் உடல் வளர்கிறது. ஊர் வம்பு வளர்கிறது. உணர்வு வளர்ந்தபாடில்லை”.
221. “நெஞ்சே நித்தம் நித்தம் கவலை ஏன்? கவலையில் மூழ்கி முதலை இழப்பானேன்? எழுந்திரு! உழைத்தால் கவலையைக் கடந்து வாழலாம்”.
222. “இறைவா! இந்த தடவை மட்டும் மன்னித்து விடு என்று எத்தனை தடவை உன்னிடம் மன்றாடிக் கேட்டிருப்பேன்? எத்தனை தடவை நீயும் மன்னித் தாய்? ஆனால் நான் எழுந்து நடப்பதாகத் தெரிய வில்லையே மன்னிபுப் பொருளற்றுப் போயிற்றே!”