34
தவத்திரு அடிகளார்
249. “மனித முயற்சிகள் படைக்க வேண்டிய நுகர் பொருளை-செயற்கையை-ஆன்மீகத்தால் ஈடு செய்யக்கூடாது. அதற்கு முயற்சியே தேவை. ஆன்மீகம் என்பது ஆன்மாவின் தேவைகளை ஈடு செய்ய வேண்டும்.”
250. “இன்றைய ஆன்மீகம் ஆன்மாவைப் பற்றியே கவலைப்படவில்லை. கடவுளைப் பற்றியே கவலைப்படுகிறது; இது தவறு.”
251. “கடவுளைப் பற்றிய கவலை மனிதனுக்கு எதற்கு? முதலில் அவன் மனிதனைப் பற்றி கவலைப் படட்டும்.”
252. “சித்துக்களைக் காட்டி ஆன்மீகத்தை வளர்ப்பது-செயற்கையாக மூச்சுவிடுதலைப் போலத்தான்.”
258. “ஞானம் கண்ட உண்மைகளை அனுபவத்திற்குக் கொண்டுவரும் பணியை விஞ்ஞானம் செய்கிறது.”
254. “நெடிய பகை கொள்ளுதல், என்றும் தோல்வியையே தரும் நெடிய பகையைத் தவிர்த்திடுக.”
255. “தமிழ் நாட்டில் சாமியார்கள் சண்டை மலிந்துவிட்டது. துவரத் துறத்தல் இன்மையால் வந்த விளைவு.”
256. “எவ்வளவு உயர்ந்தவனாக இருந்தாலும் தனி மனிதன், தனிமனிதன்தான் கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயல்களுக்குரிய பலன் கிடைக்காது.”
257. “சமூக அநீதிகளை எதிர்த்தே சமயம் தோன்றியது. பின் அதுவே சமூக அநீதியின் உருவமாக மாறிவிட்டது.”