38
தவத்திரு அடிகளார்
287. “ஆற்றலைத் தருவது ஆர்வம்: ஆர்வத்தைத் தருவது, வாழ்க்கையின் மீது ஏற்படும் ஆசை. ஆசைகள் ஆர்வங்களாக மாறவேண்டும். ஆர்வங்கள் அயரா உழைப்புக்களாக மாறவேண்டும். இதுவே வாழ்வு”.
288. “துய்த்தலைத் தடுத்தல் வளர்ச்சியைக் கெடுக்கும்; துய்த்தற்குரிய பொருளைப் பெற முயலும் ஆர்வமின்மை, வறுமையைத் தரும். வறுமை, தலை விதியை நம்பத்துண்டும். இவையெல்லாம் முறை பிறழ்ந்த நிலை”.
289. “எந்த ஒன்றிலும் கைப்பிடியான பிடிப்பு இல்லையானால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்காது”.
290. “எதையும் முறையாகச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இல்லையானால் தவறுகள் நிகழ்வதைத் தவிர்க்க முடியாது”.
291. “திடீர்” என்ற வார்த்தை சோம்பேறிகளின் ஒழுக்கக் கேடர்களின் வார்த்தையாகும்”.
292. “அலட்சியங்கள் கோடிக் கணக்கில் இழப்பைத் தரும்”.
293. “கடமைகளைச் செய்வதில் புத்துணர்ச்சி மிக்க ஆர்வம் தேவை”.
224. “அறிவுக்குத் தொடர்பில்லாத உடல் இயக்கத்தில் ஒழுங்கு மிகுதி. உதாரணத்திற்குச் சாப்பிட மறப்பதில்லை! ஒரு வேளை உணவும் தவிர்வது இல்லை! ஆனால், உயிரியக்கத்தில் அறிவோடு தொடர்புடைய உயிரியக்கத்தில் எத்தனை மறதிகள்! தவறுகள்!”
295. “தாமே வாழத் தெரியாதவர்களால் சமுதாயத்திற்கும் கேடு வரும்”.