சிவ சிவ
திருவருள் திரு
தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக
பரமாசாரிய சுவாமிகள், ஆதீனகர்த்தர்
திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 630 206
அருள் நெறித் தந்தை குருமகா சன்னிதானத்தின் பொன்மொழிகள் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு தாரக மந்திரங்கள்.
சுழன்றடிக்கும் காற்று இல்லாத பொழுது சிறிய அளவு சூடம்கூட எரியும், காற்று வேகமாக அடிக்கும் பொழுது எரியக் கூடிய அளவு சூடம் இருந்தாலும் அணைந்துவிடும்.
அதுபோல நெருக்கடியும் துன்பங்களும் இல்லாத பொழுது வேலையின் அளவும் தாமும் குறைந்தாலும் ஆபத்து வந்துவிடாது.
நெருக்கடி நிறைந்துள்ள போழ் தில் கடுமையாக உழைத்தால் மீளமுடியும்.
உழைப்பு ஒன்றே ஆன்மாவை ஈடேற்றும் வழி என்பதை, இதைவிட அற்புதமாக வேறு எப்படி சொல்ல இயலும்? .
இந்துக்கள் ஒருமைப்பட வேண்டும் என்ற ஆர்வத்தில் தவறு இல்லை. ஆனால், அந்த ஆர்வம் உண்மையான இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு பதிலாக மீண்டும் சாதி மேலாதிக்கம் கொள்ள முயல்கின்றது.