சிந்தனைத் துளிகள்
41
316. “பால் பிடித்த கதிர் தாழ்கிறது. பதர் தலை நிமிர்ந்தாடுகிறது. அற்ப மனிதர்கள் ஆர்ப்பரவம் செய்வர். பொருட்படுத்தாதே! அடக்கமானவர்களை அணுகுக; அமரத்துவம் பெறுக”.
317. “எவ்வளவுதான் நேசித்தாலும், நமது பணிகளில் பங்குபெற வராது போனால் பயனில்லை”.
318. “ஒப்புரவு இல்லாத உறவு, உப்புக்கும் பயனில்லாதது”.
319, “புறத்தே புதுமை காட்டி அகத்தே பழைமையை ஒளித்து வாழ்வோரும் உண்டு.”
320. நாலுபேர்’ நன்மைக்கு மட்டுமல்ல; தீமைக் கும் சேர்கிறார்கள்.”
321. ‘உழைக்காமல் வாழ நினைப்பது மனித இயற்கை உழைத்து வாழ நினைப்பது அறிவுடமை யின் அழகு.’ -
322. பணத்தின் மீது ஆசை, மனிதனை மிருக மாக்குகிறது. பணம் செய்வதற்குரிய உழைப்பை விரும்புகிறவன் மனிதனாகிறான்.
323, “தனிமனிதச் சிக்கல்களுக்குத் தீர்வு காண, சமுதாயத்தைத் திரட்டுவது தவறு’
324. “நாட்டின் நலனில் கருத்தும், தொழில் செய்யும் மனப்பான்மையும் தோன்றாத வரையில் நாடு வளராது.’ -
325. பசு, தெய்வம் போலப் போற்றப்படுகிறது. ஏன்? பசுவின் உணவோ வைக்கோல். பசுவின் கழிவு கள் அனைத்தும் மனிதனுக்கு மருந்தாக-உணவாகப் பயன்படுகின்றன. இப்படி வேறு ஒரு வாழ்க்கை இல்லை, - - .