பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

45



356. “பொது அறிவு. இயற்கை அறிவு ஏற்புடையதே! ஆயினும் சோதித்தே ஏற்றல் வேண்டும்.”

357. “மனுக்கள் வெறிச்சோடிய விளம்பரத்தின் சின்னங்களே!”

358. “அரசியல் வேறு. அரசாங்கம் வேறு.”

359. “அரசியல் மாறுபடலாம்; அரசாங்கத்தின் நடைமுறையில் மாறுபடக் கூடாது.”

360. “வேலை செய்யும் விருப்பமே தேவை. விருப்பம் வந்துவிட்டால் வேலை கிடைத்துவிடும்.”

361. “பிழைப்புக்கு வேலை தேடுபவர்கள் பயனற்றவர்கள். வேலை செய்வதன் மூலம் பிழைப்பு நடத்த விரும்புகிறவர்கள் வாழ்பவர்கள்.”

362. “கடவுள், சோதனைக்காகத் துன்பத்தைத் தருவான் என்பதும் சுரண்டல் வர்க்கத்தின் தத்துவமே.”

363. “நமது மக்கள் யாரையும் தங்களுக்குப் பயன்படுத்த நினைப்பார்களே தவிர, மற்றவர்களுக்குப் பயன்படமாட்டார்கள்.”

364. “அரசாங்கத்திடம் கேட்டதையெல்லாம் உரிமையோடு பெற விரும்புபவர்கள், அரசாங்கத்திற்குரிய கடமைகளை செய்ய முன்வருவதில்லை.”

365. “இந்திய நாட்டின் கலாச்சார மொழியாக இருக்க சமஸ்கிருதம் தகுதி உடையதன்று. சமஸ்கிருத கலாச்சாரம் வளர்ச்சியடையாதது; தமிழே தகுதியுடையது.”

366. “தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல. தமிழே ஒரு நாகரிகமாகவும் சமயமாகவும் வளர்ந்துள்ளது."