பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

57



469. “காலம் வரும் என்று காத்திருப்பது கையாலாகாதவர்களின் செயல்; காலத்தை உருவாக்கிக் கொள்வது வாழ்வாங்கு வாழ்வோரின் செயல்.”

470. “சூழ்நிலை என்பது மாற்றமுடியாத ஒன்றல்ல. சூழ்நிலையை மாற்றுவதே மனிதன் பெற்றுள்ள பகுத்தறிவின் கடமை.”

471. “மனிதகுல வரலாற்றில் சூழ்நிலைகளை மனிதகுலம் மாற்றி வளர்ந்துள்ள சாதனையையே பார்க்கிறோம்.”

472. “தேர்தல் வெற்றி-தோல்விகளைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் நல்ல வலிமையான அரசை அமைக்க முடியாது.”

473. “மனிதன் எப்போதும் போர்க்குணம் உடையனவாக விளங்கவேண்டும்.”

474. “வாழ்க்கையை எளிதாக நடத்திக் கொள்ளக் கூடிய துழல்களை உருவாக்காது பணத்தின் மூலம் மட்டும்தான் வாழ்க்கையை நடத்த இயலும் என்ற சூழ்நிலை உள்ளவரையில் லஞ்சத்தை ஒழிக்க இயலாது.”

475. “நமக்கு முன்னேற வாய்ப்புக் கிடைத்த பொழுது நாம் முன்னேறுவதுடன் நம்முடன் இருப்பவர்களையும் அழைத்துச் சென்றால்தான் அழுக்காறு தோன்றுவதைத் தவிர்க்கலாம்.”

476. “பிரிவினைகளால் அதிகாரம் வரலாம். பகை போய்விடாது.”

477. “ஒன்று எவ்வளவுக்கு அமுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு வேகமாக மீண்டும் எழும்பும்.”