62
தவத்திரு அடிகளார்
509. “இன்று மத இயக்கங்களும் அரசியல் கட்சிகளைப் போல, கட்சி-பிரதி கட்சி மனப்பான்மையில் தான் இயங்குகின்றன.”
510. “செய்யும் வேலையைச் சுவைத்து கலை உணர்வுடன் பயனுணர்வுடன் செய்யாது போனால் அந்த வேலையில் குறையிருக்கும். போதிய பயன் இருக்காது.”
511. “எந்த ஒரு செயலிலும் அந்தரங்கமான ஆன்மாவின் முத்திரை பதியச் செய்தால் பொலிவு இருக்கும்.”
512. “தேரின் அச்சுக்கும் சக்கரத்துக்கும் இடையில் உள்ள தூரம் அளவாக இருந்தால் தேர் சீராக ஒடும். ஆன்மாவின் வாழ்க்கைக்குரிய தேவைகளுக்கும் உடலின் வாழ்க்கைக்குரிய தேவைகளுக்கும் உள்ள இடைவெளி குறைவாக இருந்தால் வாழ்க்கை என்ற தேர் சீராக ஒடும்.”
513. “திறமை மிகுதியும் இல்லாதாரே பெருமைக்குப் போட்டி போடுகின்றனர்.”
514. “திருக்கோயில் தேர் இழுவையில் உள்ள ஆர்வம்போல் சமுதாயத் தேரையும் இழுத்து, இன்ப நிலையில் நிறுத்த முயற்சித்தால் நல்லது.”
515. “வாழ்ந்து கொண்டிருக்கிறபோது, யாரும் ஆலோசனை கூறார். வீழ்ந்து படுத்துவிட்டால் ஆளுக்கொரு ஆலோசனை சொல்லிப் பைத்தியக்காரத் தனத்தை வளர்ப்பார்கள்.”
516. நூற்றுக்கணக்கான பேர் தேரிழுத்தாலும் ஒரு சிறு முட்டுக் கட்டையையும் சமாளித்து இழுக்க