சிந்தனைத் துளிகள்
77
657. “நடையில் வலக்கால் - இடக்கால் ஒத்திசைந்து நடப்பதுபோல, நிர்வாக அமைப்பு ஒத்திசைந்து இயங்கவேண்டும்.”
658. “செய்ய முடியவில்லை” என்று திட்ட மிடவே பயப்படுகிறவர்கள் ஒன்றுமே செய்ய மாட்டார்கள்.”
659. “பொருளாதார முன்னேற்றம் என்பது ஒரு வழுக்கல் மரம். இதில் கவனமாக ஏறவேண்டும்.”
660. “வேலையைச் செய்யாதவர்கள், வேலை பறிபோவதை விரும்பமாட்டார்கள்.”
661. “உடலுக்குச் சலுகை தரலாம், உயிர்ப் பாதுகாப்புக்கு முரண் இல்லாமல்! அதுபோல, சமுதாய நலனுக்கு விரோதமில்லாமல் சலுகை காட்ட வேண்டிய அவசியமிருந்தால் சலுகை காட்டலாம்.”
662. “ஏழ்மை திடீரென வந்ததன்று. பலவித மான கேடுகள் முதிர்ந்த நிலையில் ஏழ்மை ஆகிறது.”
663. “பலவிதமான உணர்வுகளின் தொகுப்பே நல்வாழ்க்கை.”
664. “சிறியவர்கள் முரட்டுத்தனத்துக்கே கட்டுப்படுவார்கள்.”
665. “எதிர்மறை இயக்கங்கள் ஆக்கப்பணிகள் செய்ய இயலாது.”
666. “சட்டங்களில் உள்ள ஒட்டை வழித் தப்பித்து ஓடினால் ஓடுபவனைக் குறை சொல்லக் கூடாது. சட்டத்தையே குறை சொல்லவேண்டும்.”
667. “எப்படியோ மனிதர்கள் அவர்களைச் சுற்றியே வட்டமிடுகிறார்கள்! மற்றவர்களைப் பற்றிக்.”