பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தவத்திரு அடிகளார்



710. “ஒழுங்குப்படுத்திக் கொள்ள மறுப்பவர்கள் ஒன்று தவறு செய்பவர்கள். அல்லது சோம்பேறிகள்.”

711. “எந்த ஒன்றும் திருப்பித் தரப் பெறாது போனால் உலகில் வறட்சி தோன்றும்.”

712. “பணம் வருவதும் போவதும் போதாது. ஒவ்வொரு காசும் வரும்பொழுது நற்பண்புகளுடன் அதாவது அறிவறிந்த ஆள்வினை-அன்பு முதலியவற்றுடன் வந்தடைய வேண்டும்.”

713. “தமிழின ஒருமைப்பாடு காண்பதே சிலம்பின் நோக்கம்.”

714. “பெருமை வந்துறும்பொழுது சிலர் அடங்காமல் அகந்தை கொள்வர். இது உறவை, ஒருமைப்பாட்டைக் கெடுக்கும்.”

715. “வள்ளுவம், சிலம்பு முதலியன கூறும் உயர்ந்த நோக்கங்களைச் சமுதாயம் முறியடித்துவிட்டது.”

716. “சட்டங்களுக்குத் திருத்தங்கள்-சமுதாயத் .ேதவைகலளாக அமையவேண்டும். இதைக் கண்காணித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுவர சட்ட ஆலோசனை ஆணைக்குழு தேவை.

717. “வாழ்க்கையின் துணை நலமாக அமையும் பெண், அனுபவப் பொருளாகவும் பயனாகவும் இருக்கிறாள்.”

718. ஞானம் இல்லாதபெண்கள் உள்ள சமுதாயம் சீர்கெடும்.”

719. “மக்களைத் தகுதியுடையவர்களாக வளர்க்கும் வரை நம்பிக்கையும் கண்காணிப்பும் இணைந்தே இருக்கவேண்டும்.”