பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

85



739. “ஒழுங்கு முறையில்லாத செயற்பாடுகள் பயனைத் தரா.”

740. “அறிவார்ந்த வாழ்க்கையில் பின்தங்கிய நிலை, பண்பாட்டுக் குறைவைக் காட்டும்.”

741. “ஆசைகள் நிறைவேறாமை, வாழ்க்கையின் தொடக்கங்களாக அமையும்.”

742. “செலவழிக்கப் பெறாத காசுகளும் வரவேயாம்.”

743. “பயமும் சமூகத் தீமையே.”

744. “பொதுமையில் உருவாகும் நன்மைக்கு ஈடு இல்லை.

745. “பெரும்பான்மை உணர்வின் வழிப்பட்ட ஆதிக்கநிலை உணர்வுநிலை எல்லாச் சமூகத்தினருக்கும் உண்டு.”

746. “எந்தப் பணிக்கும் முதற்பணி மக்களைப் படிப்பிக்கும் பணியேயாம்!”

747. “பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் அல்லர்; பழகாதவர்கள் எல்லாம் பகைவர்களும் அல்லர்.”

748. “உடல் நலத்திற்குச் சுற்றுப்புறச் சூழ்நிலை தேவை. அதுபோலவே உயிர் நலத்திற்கும் சுற்றுப்புறச் சூழ்நிலை தேவை.”

749. “ஒருவருக்கொருவர் மாறிக் கவலைப் பட்டாலே புதிய சமுதாயம் தோன்றிவிடும்.”

750. “வாழத் தெரியாதவர்களுக்குச் செய்யப்படும் உதவி பாழுக்கிறைத்ததாகும்.”

751. “ஒருவரின் இருப்பு உணரப்படும் நிலையே வாழும் நிலை.”