பக்கம்:சிந்தனை மேடை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நாளுக்கு நாள் கலைத்துறையில் முன்னேறி வருகின்றது தமிழ் நாடு, இசைவாணர்கள் தங்களுக்காக இவைகளை மாற்றிக்கொள்ள விரும்பாவிடினும், இசைக் கலையின் தூய்மை யொன்றே குறிககோளாகக் கொண்டாவது இவை களே மாற்றிக் கொண்டுதான் ஆகவேண்டும். இசை தெய் வீகத் தன்மை பொருந்திய தொரு கடவுட்கலை என்பதை மறுப்பார் யாருமில்லை. அதன் தெய்வீகத் தன்மை இவை போன்ற சில சில்லறைக் குற்றங்களால் பாதிக்கப்படுமாயின் அது மிக வருந்த வேண்டிய ஒன்ருகும். இது போலவே பழைய தமிழ் நூலுரைகளில் அரிதும் பெரிதுமாக அகப் படும் சில நல்ல கருத்துக்களை அவ்வக் கலைத்துறையிற் சிறந் தார் ஏற்றுப் போற்றி ஆராய்ந்து பயன்படுத்துவது அவசியம். இசை, நடனம், நாடகம் முதலியவைகளைக் கூறும் நூல்கள் தமிழில் இருந்திருக்கின்றன. நம் காலத்துக்கு முன் அவை கெட்டன போலும். அவைகளிலருந்து கிடைக்கும் சில பல கருத்துக்களுக்கு இன்னும் பஞ்சமில்லை. ஆனல் அக் கருத்துக் களைத் தேடிக் காண முயல வேண்டும். மெல்ல மறையும் ஒரு தலைமுறை நமது கலைகள், அறங்கள், மொழியறிவு தொடர்பான துறையினர், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழில்நுட்ப வினைஞர்கள், ஆகியவற்றின் இடையேயும், ஆகியவர்கள் இடையேயும் அண்மைக் காலத் தில் ஒரு நுணுக்கமான மாறுதல் தெரிகிறது. உழைக்கும் சக்தியும், ஞாபக ஆற்றலும், தவறுதலுக்கு நாணும் சுபாவ மும் உள்ள ஒரு பழைய தலைமுறை குறைந்து வருவதைக் காண்கிருேம். முயற்சியில் சலிப்பு அடையாமை, கடின உழைப்பின் மூலம் முன்னுக்கு வருதல், பேராசை படாமை, போன்ற பழைய நாட்டுப்புறத்து நல்ல குணங்களை இன்றைய நாகரிக மனிதர்கள்பாலோ, நகரப்புறத்தவர்பாலோகூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/90&oldid=826028" இலிருந்து மீள்விக்கப்பட்டது