பக்கம்:சிந்தனை மேடை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. கதியை மாற்றுவதாகச் சொல்லிக் கொண்டு தலைதெறிக்கிற, வேகத்தில் ஒடுகிற ஒட்டங்கள் சில தோல்வியடைந்தும் இருக் கின்றன. கமா, புல்ஸ்டாப், ஸெமிகோலன், கோடு, புள்ளி. கள் போன்றவற்றைக் கொண்டும் அவைகளைப் பழைய இலக்கணச் சூத்திர விதிகளாகப் பெருத தமிழில் புதுமைகளை யும், பொருட் பாகுபாடுகளையும் இன்று விளைவிக்கிருேம். சொற் சிக்கனத்துக்கும், வாக்கியக் கட்டுக்கோப்பிற்கும், இந்தக் குறியீடுகள் (Punctuation) பெரிதும் உதவுகின்றன. ஆளுல் பழைய தமிழில் (ஏடுகளில் எழுதி வந்த காலத்தில்) வாக்கியம் முடிவதை அல்லது முடியாததைப் பொருளுணர் விலிருந்துதான் கண்டுபிடிக்க முடியும். ஏடுகளில் எழுத்துக் களுக்கு மேற்புள்ளிகள் கூட இடப் பட்டிராது. அச்சுக்கலை வயின் பாதிப்பினாலும், மேற்கத்திய தொடர்பிலுைம், தமிழ் இந்தப் புதிய பயன்களை எல்லாம் பெற்றிருக்கிறது. இந்தப் புதிய பயன்களை எல்லாம் எப்படி நாம் ஏற்றுப் பயனடைந் திருக்கிருேமோ அதே போல் பயனும் அழகும் தருகிற பழைய இலக்கண அம்சங்களேயும் விட்டுவிடக் கூடாது. புத்தகத்தை எடுத்தான் என்ற வாக்கியத்தில் புத் தகம்-ஐ-எடுத்தான் என்ற மூன்று சொற்கள் இணைந்து சேரும்போது புத்தகத்திற்கும் 'ஐ'க்கும் நடுவில் ’அத்து’ என்று ஒரு சாரியைச் சொல் பிறந்து புத்தகத்தை’ என்று ஆகிவிடுகிறது. இதுதான் வழக்கம். அப்புறம் இதுவே இலக்கண விதியாகவும் நேரப்பட்டுவிட்டது. இப்போது சிலர் தமிழைச் சொற் சிக்கனத்தோடும் எழுத்துச் சிக்கனத் தோடும் எழுதுவதாக நினைத்துக் கொண்டு, - - - ‘புத்தகத்தை எடுத்தான்’ என்பதை 'புத்தகம்மை எடுத் தான்’ என்று எழுதுவதைப் பார்க்கிறேன். இதன்படி எழுது, வதானால், கீழ்க்கண்டபடி எல்லாமே குழப்பமாகும். - சரியான பிரயோகம் தவருண பிரயோகம் படம் பார்த்தான் w - அல்லது படம்மைப் பார்த்தான் கபடத்தைப் பார்த்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/97&oldid=826044" இலிருந்து மீள்விக்கப்பட்டது