பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 151 ரூபாயைத் திருப்பிக் கொடுக்கும் யோக்யதை எனக்கு வரும் வேளைக்கு, மாரடைப்பில் அவர் மண்ணை விட்டே மறைந்து போனார். நிச்சயமாகச் சொல் கிறேன். அவர் என்னைத் துரண்டில் விளையாடவில்லை. தன்னால் முடிந்தவரை என்னை மீட்கத்தான் முயன்றார் என்றே சொல்வேன். ஒன்று புரிந்து கொண்டேன். ஒரே நாணயத்தில் சம்புவும், சைத்தானும் ஒன்றி வாழ்கிறார்கள் என்று. சிந்தா நதியில் ஒரு நாணயம் கப்பல் ஏறுகிறது. ● ** ఈ్మళి శిస్థ•