பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பிள்ளைவாள் அவரைப் பிள்ளைவாள் என்று அழைப்போம். y பிள்ளைவாள் பிள்ளையார்வாள். நிற்கும் போஸில் பிள்ளையார். தூக்க முடியாமல் தொந்தியைத் துரக்கிக் கொண்டு, ஒரு கையில் மோதகத்துடன் தும்பிக்கையத் தாங்கிக்கொண்டு, மத்தகத்தில் பட்டை பட்டையாக விபூதி, மகுடமில்லாது கட்டை குட்டையாக- பார்த் திருக்கிறீர்களா? இந்த வர்ணனையில் தும்பிக்கையை எடுத்து விடுங்கள். பிள்ளைவாளைப் பார்க்கிறீர்கள். இன்னொரு வித்தியா சம் அவருடைய பருமனைப் பிள்ளைவாள் வெகு சுறுசுறுப்புடன் தாங்கினார். சின்ன வயசுதான். அவர் வயதில் எனக்கு ஒரு பிள்ளை இருக்கலாம். நான் ஊருக்குப் புதுசு. மாற்றலாகி வந்து ஒரு மாத மாகியிருக்கும். அவர் பெயரில் ஒரு கணக்கு, வங்கியின் புத்தகங்களில் சாதாரணமாக இயங்கிக்கொண்டிருந்தது. அன்று சனிக்கிழமை- அவர் என்னைக் காண வந்த போது. முதன்முதலாக அப்பத்தான் பார்க்கிறேன். சனிக்கிழமை அரை நாள்தான் வங்கி, மாடியில் வங்கி, கீழே மானேஜர் குடியிருக்க இடம்