பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 & சிந்தாநதி அல்லது வீசை, பலம் K.C. கிராமாகவும், படி ஆழாக்கு, லிட்டர் மில்லியாகவும் மாறி விட்டாற்போல், நியாயத் துக்கும் எடை மாறிவிட்டதா, சாஸ்திர எடையிலிருந்து, சமுதாய எடையாக காலத்தின் மேல் பழியைப் போட்டுக்கொண்டு, செளகரியம்தான் நியாயம் என்கிற புது எடையில், நியதிகளையே மாற்றி விட்டதோ? அண்ணா வலியுறுத்திய கட்டுப்பாடு, ஒழுங்கு, திட்டங்கள் எல்லாம் அவர் சொல்லிக் கொடுத்த பாடம் மட்டில் தான். அப்புறம் நாங்கள் அவிழ்த்துவிட்ட கன்றுக்குட்டிகள்தான். பின்னங்கால்களை உதைத்துக் கொண்டு அவர் மேலேயே துள்ளலாம். அண்ணாவிடம் அவ்வளவு சலுகை உண்டு. தோள்மேல் கை போட்டுக் கொள்வார். செல்லமாகத் தலை மயிரைக் குலுக்குவார். இரவு பெரிய கயிற்றுக் கட்டிலில் அவர் காலடியில்தான், பூனைக் குட்டிபோல் சுருண்டு படுத்து உறங்குவேன். "ராம்!” தேன், தேன். மனோதத்துவ ரீதிப்படி, மனிதன் இன்பம் நுகரும் வக்கிர வழிகளில் ஒன்று: பிறனுக்குக் கொடுரம் இழைத்து அவன் படும் வேதனையில், இன்னொன்று, தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதில், முதல் வகை பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அநேகமாக அது தானே நடந்து கொண்டிருக்கிறது! பின்னதன்படி, தன்னைத்தானே, உடலையோ, மனதையோ மெனக்கெட்டுப் புண்படுத்திக் கொண்டு, அதன் விளைவாய் கசிவில் மகிழ்வது, பட்டினி கிடப்பது, தவம் கிடப்பது, தன்னைத்தானே அவமானப்படுத்திக் கொள்வது இவையெல்லாம் அடங்குமோ என்னவோ? தான் செய்த தவறை ஒப்புக்கொள்வதும் தற்கொடு மையில் சேர்ந்ததுதான் என்று கட்சி பேசுவோருக்கு, அப்படியல்ல என்று உறுத்துவது அவசியமாகிறது.