பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 265 சுற்றும் முற்றும் பார்த்தாள். விளக்கேற்றி வைக்கக் கூட நேரமில்லாமல் போய்விட்டார்கள்- சுண்டல் தண்டலுக்கு, புடவைகளை வியக்க. குத்து விளக்கடியில் கிடந்த தீப்பெட்டியை எடுத்துக் குச்சியைக் கிழித்து விளக்கேற்றினாள். சுடர் திரியில் குதித்ததும் நிழல்கள் வித விதமாக நர்த்தனம் புரிந்தன. நானும் ஸ்விட்சைப் போட்டேன். ஆனால் current of கூடம் கர்ப்பக் கிரஹமாக... என்னைத் தோளைத் தொட்டுத் தன் பக்கம் திருப்பினாள். வாதாம் பருப்பைப் போன்ற மேட்டு விழிகள் என்னைத் துருவின. உக்ரமான முக வார்ப்படம் தான். என் காலில் விழுந்து, நெற்றி தரையில் இடிக்க, நமஸ்கரித்து, எழுந்துபோய், வெளியே மறைந்தாள். "க்ர்ர்ர்-l-ச்! - புல்லரிப்பில், என் பலம் அனைத்தும் அவள் தன் நமஸ்காரத்தோடு வாங்கிக்கொண்டு போய் விட்டாற் போல், சாறு பிழிந்த சக்கையாக, நாற்காலியில் சாய்ந் தேன். - விளக்கும் வந்தது. மோன அம்பரத்தினின்று பிதுங்கிய ஒரு தருணம். தருணத்தின் தருணி. மோன தர்சினி, இன்பமாயிருக்கிறது. பயமாயிருக்கிறது. சிந்தா நதி தீரே மோன விஹாரே.