258
களை காட்டியுள்ளமை இவண் குறிப்பிடத்தக்கது. பீரப்பாவும் இபுலீசை உருவகப்படுத்தி வர்ணித்துள்ளார்.
"குணத்தினால் நரியொழுங்குங்
கொடு விசமாவு தந்தம்
தனத்திடு தலையிற் கொம்பு
தானது நடுவே யொன்று
யனைச்சிடு மதச்கரியின்
பாங்கென வாலுங்காலுங்
கனத்த கோல் கையிலேந்திக்
கசடனும் பிறந்தானப்போ" [1]
புலவர் நாயகமும் இபுலீசு உருவத்தினைப் பாடியுள்ளார்.
"நிரையுமேனியுங் கூனியுந்தே யெயிற்
றுறையுங் கோலினிலுன்றது நின்றலு
நரையுந் தாடியு நாடியுமாடியும்
புரையும் புல்லிபு வீசவன் புக்கினான்." [2]
'இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களில் இபுலீஸ் என்பவன் பாட்டுடைத் தலைவனின் எதிரியாக வருணிக்கப்பட்டுள்ளான்." [3]
இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் இபுலீசு பற்றிய தனியிலக்கியம் படைத்தனர். செய்யிராக்கரின் 'இபுவீசு நாமா' குறிப்பிடத்தக்கது.
உமறுப்புலவர் இபுலீசைக் கூறும் அடைமொழித் தொடர்களைக் காண்போம்.
'மாயவஞ்சகன் (யாத் திரைப் படலம். 5-6); "வஞ்சநெஞ்சி புலீசு "(உகுதுப் படலம். 109); "சனவஞ்சக மாயவன் கொடியவனிதமிலூனமுற்ற கண்ணினன் றொடர்ந்தெவரை