பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

#5 வித்து சுதாரித்துக் கொள்ளும் சித்தி பெற்ற வர் தமிழ்ப்பட நாரதர் - ஆடத் தெரிந்த அணங்குகள் கிருஷ்ண நாட்டி யம் ஆடித் தீர்க்க வேண்டும் என்கிற சினிமா உலக தர்மம் போன்ற மற்ரறொரு எழுதாக் கிளவி பாட வல்ல பாவையர் தமிழ்ப்பட நாரதராக வந்தாக வேண்டும் என்பதும் - - இந்தப்போட்டி மனோபாவம் காரணமாகதமிழ்ப் படத்தை உருப்படாமல் அடிக்கிறார்கள் கடவுள்கள்! கதாபாத்திரங்களின் தோற்ற ஒருமை, ஆடை ஒருமை முதலியன படத்துக்குப் படம் வித்தியாசப் படுகின்றன. மகாவிஷ்ணு என்றால் ஒரே பண்பு, நார தர் ஒரே வார்ப்படம் என்ற ரீதி கிடையவே கிடை யாது- ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி அவதா ரம் எடுப்பார்கள் போலும் இந்தக் கடவுளர்கள் இதே போன்ற சித்துவிளையாடல்கள் புரியும் சாமிகளில் இன்னுமொரு ஆசாமி உண்டு. அவர் தான் சிவனார்: அவர் தனித்துவம் பெற்ற கடவுள். ஆகையால் தனிக் கவனிப்புக்கு உ. ரியவரா கும் பெருமை அவருக்கு உண்டு,