பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெருத்த அவமானம், அந்தப் படம் இல்லையா இந்தப் படம் இருக் கிறதே. அவர் நடித்த இன்னின்ன படங்கள் வருஷக் கணக்காக ஓடவில்லையா என்று நீட்டி முழக்க முயலலாம் சிலர். அது சும்மா கண் துடைப்பு வியா பார மே ஆகும். பிள்ளை யில்லாப் பெண்கள் நாயை

யும், பூ னையை யு ம், கிளி மைனா போன்ற பறவை களையும் செல்லமாகக் கொஞ்சி குழந்தை மாதிரி' வளர்க்கிற கணக்குத் தான் இதுவும். படவுலகில் புகுந்தவர்கள் நாடகத்தை பிழைப் பாகக் கொண்டிருந்தவர்கள், அந்தக் கா ல த் தி ல் நாடகக்கலை ஒரு சிலரது திறமையால் புகழ் பெற் றிருந்தது என்றாலும் காலப் போக்கிலே எய்திய கலைமெருகும் நுணுக்க மேன்மைகளும் பெற்றிருக்க வில்லை. அடுக்குச் சொல் வாயர்களும், அழுது ஒப் பாரி பாடும் ஐயாக்கமார்களும், தடாலடி வீரர்களும் சுலபமாகப் பெயர் பெற முடிந்திருந்தது. அவர்களும் அவர்களைப் பின்பற்றுகிறவர்களும் படக்கலை என்ற புதுமையைக் கைபிடிக்கத் துணிந்த தும், அவர்களுடன் அவர்கள் செல்வமாகப் போற்றிய பழம் புராண நா ட க ங் க ளு ம் கந்தல் கதைகளும் திரைப்படமாயின. வள்ளி கல்யாணம், அரிச்சந்திரன் , சத்தியவான். பவளக்கொடி, கிருஷ்ண லீலை, ராமாயணம் என்பன போன்ற நாடகங்கள் அப்படி அப்படியே சினிமாக்களாயின. ஒரு புதுமை என்ற நிலையிலே படம் ஆடும் பேசும் பாடும் எ ன் கி ற அதிசயம் திரையில் மலர்ந்து ஒளிர்வதை அறிந்த மக்கள்