பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ஆர்லோவ் தம்பதிகள் ஒருவருடன் சம்பாஷிக்க முடியுமானல் மாணவர்களில் ஒருவனுடன் பேசவேண்டும் என்று அவன் அ .ே க தடவைகள் முயன்றது உண்டு. ஆனல் தத்துவ விசாரம் செய்து கொண்டிருக்க அவர்களில் யாருக்குமே நேரம் இல்லை. ஆகவே தன் மனேவியைத் தேடிச் சென்று அவளு டன் பேசுவது தவிர வேறெதுவும் செய்வதற்கில்லை. அவன் வருத்தத்தோடு முகம் வாடித் தொங்க அவளிடம் சென்ருன். - அவள் தனது அறையின் ஒரு மூலையிலிருந்து தன் உடலை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். மேஜை மீது ஸ்மோவார் கொதித்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து எழுந்த இரைச்சலும் ஆவியும் அறை பூராவும் பரவி யிருந்தன. கிரிகளி ஒன்றும் பேசாமல் உட்கார்ந்து, தன் மனைவி யின் மென்மையான தோள்களையே பார்த்துக் கொண்டி ருந்தான். ஸ்மோவார் களகள ஒலி எழுப்பியது. தண்ணிர் தெறித்துச் சிதறியது. மேட்ரோன தும்மினுள். தாழ் வாரத்தில் அங்குமிங்கும் கடந்தவர்களின் காலடி ஓசை கேட்டது. காதினுல் கேட்டே யார் யாருடைய காலடிச் சத்தம் என்று ஊகிக்க முயன்ருன் கிரிகளி. மேட்ரோனுவின் தோள்களும், வலிப்பில் கிடங்து அவதியுற்ற ஸென்காவின் தோள்களைப் போலவே, குளிர்ந்து ஈரப்பிசுபிசுப்பு உடையதாக மாறுவது போல் திடீரென்று தோன்றியது அவனுக்கு. அதனல் அவன் கடுங்கின்ை. "ஸென்கா செத்துப்போனன்” என்று மங் த மான குரலில் அவன் அறிவித்தான், "ஸென்காவா ஆண்டவன் அவன் ஆத்மாவுக்கு அமைதி அளிக்கட்டும்” என்று மேட்ரோன பக்தியோடு