பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 153 காரியத்தைக் கவனி' என்று மேட்ரோன மெலிந்த குர லில் பேசினுள். ஒன்றும் சொல்லாமல் கிரிகரி முற்றிலும் செயல் இழந்த தன்மையில் அவளேப் பார்த்தான். தன் மனைவியை அடக்கியே திருவது என்ற உறுதியோடு தான் அவன் வந்தான். முந்திய தினத்துச் சண்டையில் அவளே பலம் மிகுந்தவள் என்று கிருபித்து விட்டாள். இதை அவன் உணர்ந்தான். அது தனக்குப் பெரும் அகெளரவம் என்றே அவன் கருதினன். தான் அவளேக் கட்டாயம் பணிய வைக்க வேண்டும்- பணிய வைத்தே ஆக வேண்டும்என்று நிச்சயமாக அவன் அறிந்திருந்தான்.உணர்ச்சி வயப் பட்டவன் அவன். கடந்த இருபத்தி நான்கு மணி நேரத் திற்குள் அவன் எண்ணியதும் துயருற்றதும் அதிகமே யாகும். தனது மனேவியின் கியாயமான குற்றச்சாட்டு அவனுக்குத் தந்த உணர்ச்சிக் குழப்பம் எத்தகையது என் பதைப் புரிந்து கொள்ள முடியாதபடி அவனுடைய மன இருள் அவனைத் தடுத்திருந்தது. அவள் தன்னே எதிர்த்துக் கலகமிடுகிருள் என்று தான் அவன் கின்ேத்தான். ஆகவே அவளை பயமுறுத்துவதற்காக அவன் ஒரு கத்தியை எடுத்து வந்தான். அவனே எதிர்ப்பதில் அவள் மேலும் தீவிரமாக இருந்திருப்பின், அவன் அவளேக் கொன்றிருப்பான். ஆனல் அவளோ எதிர்க்க முடியாமல் துயரால் நலிந்து போய் கின்ருள். எனினும், அவனே விட வலியவள் ஆகி விட் டாள். அது தான் அவனேக் குத்தியது. அந்தக் குத்தல் அவனுக்குத் தெளிவு ஏற்படுத்தியது. "இதைக் கவனி. உன் உயர்ந்த பீடத்தை விட்டு இறங்கி வா. என்னே நீ கன்ருக அறிவாய். நான் உண்மை யாகவே இதை உனது விலா எலும்புகளுக்கு இடையே திணித்து விடுவேன். அத்துடன் எல்லாம் தீர்ந்தது. ஆமாம் மிகவும் சுலபமான விஷயம்' என்று அவன் சொன்னுன்.