பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இரண்டு குழந்தைகள்

(ஒரு கிறிஸ்துமஸ் கதை)

வருஷத்துக்கு ஒரு தடவை, கிறிஸ்துமஸ் கதைகளில் அநேகம் சிறு பையன்களையும் பெண்களையும் குளிரினல் வழக்கமாகி விட்டது. போற்றுதலுக்குரிய கிறிஸ்துமஸ் கதையில் வருகிற ஏழைச்சிறுவன் அல்லது ஏழைச்சிறுமி வழக்கமாக பெரிய மாளிகை ஒன்றின் ஜன் னலுக்கு வெளியே நின்று, அற்புதமான பெரிய அறையில் தகதகத்துக் கொண்டிருக்கும் கிறிஸ்துமஸ் மரத்தைப் பார்த்து அதிசயிப்பதும், பிறகு மனம் கசந்தும் ஏக்கம் அடைந்தும் பணியில் விறைத்துச் சாவதும் சகஜம். அவர்கள் சிறு கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும் தீர்த்துக்கட்டுகிற கொடுமையான முறை எனக்குப் பிடிக் காத போதிலும், அவ் ஆசிரியர்களின் நல்ல நோக்கத்தை நான் போற்றுகிறேன். பணக்காரச் சிறு குழந்தைகளுக்கு, அவ் ஏழைச் சிறு பிள்ளைகளைப் பற்றி நினைவு படுத்துவதற் காகவே அந்த ஆசிரியர்கள் அவர்களைக் குளிரினல் சாகும் படி செய்கிருர்கள் என்பதை நான் அறிவேன். ஆயினும், அத்தகைய ஒரு உயர்ந்த நோக்கத்திற்காகக் கூட ஒரு