பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 37 சோதிடம் கூறினன். 'என்றைக்காவது ஒரு நாள் அவளு டைய பாட்டுகள் அவனுக்கு அலுத்துப் போகும். உடனே அவன் எல்லாவற்றுக்கும் முடிவு கட்டி விடுவான்.” "ஆட்டம் முடிந்தது' என்று ரகசியக் குரலில் ஒலி பரப்பிக் கொண்டே சென்கா துள்ளி எழுங்தான்,துரத்து மூலையில் உள்ள ஒதுக்கிடம் ஒன்றில் பதுங்கி கின்று கவனிப்பதற்காகப் பாய்ந்து ஓடினன். இனி எந்த நேரத் திலும் ஆர்லோவ் வெளியே கிளம்பி விடுவான் என்பது அவனுக்குத் தெரியும். ஆங்கார ரூபனை செம்மானின் கண்களில் படாமல் தப்புவதற்காக எல்லோரும் வேகமாகக் கலைந்து போனர்கள். அந்தச் சமயத்தில் அவனைச் சந்திப்பது ஆபத் தானது. அதுவுமன்றி, சண்டை தீர்ந்து போனதால் அவர்கள் அவ்விவகாரத்தில் கொண்ட உற்சாகத்தை இழந்து விட்டார்கள். - - பொதுவாக, ஆர்லோவ் வெளியே தலை காட்டுகிற வேளையில் அங்கே அந்த முற்றத்தில் சென்காவைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். சிரமத்தோடு மூச்சு விட்டுக் கொண்டு, கிழிந்த சட்டையும் குத்திட்டு நிற்கும் தலே முடியுமாய், கிளர்ச்சியுற்ற முகத்தில் கைக் கீறல்களும் வேர்வையும் நிறைந்து தோன்ற, அவன் காட்சியளிப்பான். ரத்தம் பாய்ந்த விழிகளால் அந்த முற்றம் முழுவதையும் நோக்குவான். தனது கைகளே முதுகுப் புறத்தில் கட்டிக் கொண்டு மெதுவாக கடந்து, அங்கு வெளிப் புற வீடு ஒன்றின் ஓரத்தில் கவிழ்த்துப் போடப்பட்டிருந்த சறுக்கு வண்டி அருகே போவான். சில சமயங்களில், பெடுன்னி கோவ் வீட்டில் குடியிருக்கிற எல்லோரையுமே வம்புச் சண்டைக்குஇழுக்க ஆசைப்படுகிறவன் மாதிரி, கம்பீரமாக சிட்டி அடித்துக் கொண்டே கடப்பான் அவன். பிறகு