பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஆர்லோவ் தம்பதிகள் உன்னே அளவுக்கு அதிகமாக ருசித்து விட்டது போன்ற உணர்ச்சிதான். அப்போதெல்லாம் என் இதயத்தினுள் ஒரு வெறி புகுந்து விடுகிறது. உன்னே துண்டு துண்டாகப் பிய்த்து எறிய வேண்டும் என்கிற வெறி. என்னேயும் கூடக் கிழித்து விட வேணும் என்ற துடிப்பு. எவ்வள வுக்கு எவ்வளவு உன் பங்கில் கியாயம் இருக்கிறதோ, அவ்வளவுக்கு அதிகமாக கான் உன்னேக் காயப் படுத்த விரும்புகிறேன்.” அவனே அவள் கன்ருகப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆயினும் அவனுடைய துக்க மயமான மென் குரலினல் அவள் வெகுவாக ஆறுதல் அடைவாள். "ஆண்டவன் அரு ள் இருந்தால், நாம் இதைச் சமாளித்து விடுவோம். காம் ஒருவருக் கொருவர் பழகிப் போவோம்' என்று அவள் சொல்லுவாள். இதற்கு முன்பிருந்தே வெகு காலமாக அவர்கள் இருவரும் பரஸ் பரம் பழகிப் போனது மட்டு மல்ல; சலிப்பும் கொண்டு விட்டார்கள் எனும் உண்மையை உணராமலே அ வ ள் பேசுவாள். "மேக்கு ஒரு குழந்தை மட்டும் பிறந்திருக்குமானல், கிலேமை வேறு விதமாக அமைந்திருக்கும். நம்மை சந்தோஷப்படுத்தவும், காம் அக்கறை காட்டுவதற்கும் ஏற்ற ஒரு சாதனமாகிவிடும் அது” என்று கூறி நெடுமூச்சு எறிவாள் அவள். - "சரிதான். பின்னே நீ ஏன் குழந்தை பெறவில்லே?" "என் வயிற்றில் பிள்ளை தங்குவது கஷ்டம். நீ அடிக் கிற விதம் தான் காரணம். எப்பொழுது பார்த்தாலும் ே என் வயிற்றிலும் விலாவிலும் தான் கடுமையாகத் தாக்கு கிருய். நீ மட்டும் உன் கால்களால் உதைக்காமல் இருந்தால்......” -