பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்லோவ் தம்பதிகள் 73 எதற்காகக் கூலிக்கு அமர்த்தப் படுகிருர்கள்? யார் அவர்களைக் கூலிக்கு அமர்த்துகிருர்கள்?' என்று கிரிகரி குறுக்கிட்டான். "மக்களைக் கொல்வதற்காகத்தான் கூலிக்கு அமர்த்தப் படுகிருர்கள். ஏழை எளியவர்கள் மிக கிறைய இருக் கிருர்கள் என்றும், அதிகப்படியானவர்களை அகற்றி விட உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லிக் கொள் கிருர்கள்.” - "யார் அப்படிச் சொல்வது?’’ "எல்லோரும்தான். வர்ணம் பூசுகிறவர் வீட்டுச் சமையல் காரியும் இன்னும் பலரும் தான்.” "அப்படிச் சொல்கிறவர்கள் முட்டாள்கள் தான். அது மாதிரிக் காரியத்தினலே யாருக்கு என்ன லாபம்? நீயே யோசித்துப் பார்: சீக்காளிகளைக் கவனிக்கணும்அதுக்குக் கொஞ்சம் பணம் செலவாகும். ஆகாதா பின்னே? அப்புறம் அவர்களேப் புதைக்க வேணும். அதற்கு சவப் பெட்டி, புதை குழி இன்னும் எவ்வளவோ இல்லேயா? அதற்காகும் செலவெல்லாம் கஜாணுவிலிருந்து தான் வரணும். அபத்தப் பேச்சுதான். நிஜமாகவே அவர்கள் மக்களை அகற்றிவிட விரும்பினால், எல்லோரையும் சைபீரி யாவுக்கு அனுப்பி விடுவார்களே. அங்கே தான் எல்லோ ருக்கும் காணும்படி ஏகப்பட்ட இடம் கிடக்கிறதே. அல்லது எங்காவது ஒரு தீவாந்தரத்துக்கு அனுப்பிவிட்டுப் போகிருர்கள். அங்கே மக்களிடம் வேலையும் வாங்கலாம். அப்படிச் செய்வதால் அதிகப்படியானவர்களே அகற்றிய தாகவும் ஆச்சு; வெகு லாபகரமான திட்டமாகவும் அமையும். கஜான கண்ணும் கருத்துமாக இருப்பது லாபத்தைத் தவிர வேறு எதிலுமல்ல. ஆகவே, மக்களைக் கொன்று தன் சொந்தச் செலவில் அவர்களைப் புதைக்க