பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தித்துவிட்டு சென்றபின் கோவை ரயில் பயண வழிநிலையில், ஒரு கடிதம் எழுதினார். அந்த நட்பெழுத்துக்கள் இப்போது என் நினைவுக்கு வருகின்றன. 'தமிழுக்கும், தமிழருக்கும், தமிழகத்துக்கும், தாங்கள் ஏதாவது செய்திட வேண்டுகிறேன். தங்கள் எழுத்தாற்றல் கொண்டு!" தமிழ் இலக்கியச் சூழலில் தமிழ்க் குழந்தைகளை நவீன காட்சி ஊடகங்கள் இன்று ஆக்ரமித்துக் கொண்டுள்ளன. குழந்தைப் படைப்புகளை செம்மையாய் எழுதுவோர் குறைந்து வருகின்றனர். இக்கால கட்டத்தின் தமிழ் வளர்ச்சித் தேவையாக இந்த எளிமையான இனிமையான குழந்தைப் பாடல்கள் விளங்கும் என்பது எனது நம்பிக்கை. நாளைய சிற்பிகளான இன்றைய குழந்தைகளுக்கு தாய்ப்பாலோடு தமிழ்ப்பால் ஊட்ட இப்பாடல்கள் உதவும் என்பது உறுதி. முத்துமுத்துக் கையெழுத்தில் எனது தந்தையாரின் படைப்புகளை படி எடுத்து வைத்திருந்த என் சகோதரி மாலாவையும், குழந்தைகளுக்கான கோட்டு மொழியில் உள் ஒவியங்கள் வரைந்து தந்த தம்பி திருவையாறு குருபாலாவையும், எனது தந்தையாரின் நூல்களை ஈடுபாட்டுடன் தொடர்ந்து வெளிக்கொணரும் நண்பர் "முற்றம் நாதன் அவர்களையும் அன்புடன் இங்கு நினைவுகூர்வதில் மகிழ்கிறேன். நேசமிக்க எஸ். ராஜகுமாரன் புதிய எண் : 14, சிவாஜி தெரு தி.நகர், சென்னை - 17. செல்பேசி : 9840124602