பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணி டாண்டாண், டாண்டாண் மணி அடிக்குது. நம்மையெல்லாம் வருகவருக என்ற ழைக்குது. சிறுவரோடு சிறுமியரைச் சேர்த்த ழைக்குது அவரவர்கள் இடத்தில்வந்தே அமரச் சொல்லுது. ஆசிரியர் வந்ததுமே நிற்கச் சொல்லுது. அக்கறையாய்ப் பாடமெல்லாம் கற்கச் சொல்லுது. படித்தபடி வாழ்க்கையிலே நடக்கச் சொல்லுது. பலரும்போற்ற நல்லபெயர் எடுக்கச் சொல்லுது! 69