பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வ பக்தி, தேச பக்தி ஊட்ட வேண்டும். சிரிக்க வைக்கும் செய்தி கூட இருக்க வேண்டும். ஐயம் தீர்க்கக் கேள்வியும் பதிலும் அவசியம் வேண்டும். அறிஞர் வாழ்வை அழகாய் எடுத்துக் கூற வேண்டும். புத்தம் புதிய கலைகள் எல்லாம் விளக்க வேண்டும். புதிர்கள் போட்டு நமது அறிவை ഖണ്ട് പേങ്ങി. நித்தம் நமது பண்பை மேலும் உயர்த்த வேண்டும். நிலைத்த புகழைப் பெறவே வழிகள் காட்ட வேண்டும். உற்ற நண்பர் போலே அவையும் உதவ வேண்டும். உதவி, உதவி நமது வாழ்வை உயர்த்த வேண்டும். பெற்றோர் அவற்றைக் காசு கொடுத்து வாங்க வேண்டும். பிள்ளை களுக்குப் பிரியத் துடனே வழங்க வேண்டும். 102