பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீரு டையை அணிந்து கொண்டு செல்வர் என்றும் ஏழை என்றும் வேறு பாடே ஏதும் இன்றி விருப்ப மோடு படித்து வருவேன். இந்தக் காலம்-இது இந்தக் காலம். இலவ சமாய்க் கல்வி உண்டு இருந்து படிக்க வசதி உண்டு கலக்க மின்றிக் கவலை யின்றிக் கல்வி கற்றுத் திரும்பி வருவேன். இந்தக் காலம்-இது இந்தக் காலம். பென்சில், நோட்டு, தேவை யான புத்த கங்கள் போன்ற வற்றை அன்ப எளிப்பாய்ப் பெற்று நானும் ஆர்வத் தோடு கற்று வருவேன். இந்தக் காலம்-இது இந்தக் காலம். இன்னும் நிறையக் கல்வி கற்று இனிய முறையில் தொழிலும் கற்று நன்மை செய்வேன், நமது நாடு நன்கு வளர, நானும் வளர்வேன். இந்தக் காலம்-இது இந்தக் காலம்.