பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடிமுழக்கம் செய்வதுபோல் சிறுவர் கூட்டம் எழுச்சியுடன் பாரதியார் பாட்டைப் பாட அரசாங்கச் சேவகர்கள் அங்கு வந்தார், "யார் இதனை நடத்துவது? சொல்க" என்றார். 'ஊர்மக்கள் நடத்துகிறோம் @65g! &t. உயர்கவியைப் போற்றுகிறோம் பாட்டுப் பாடி’ என்றதுமே அவர்எதுவும் கூற வில்லை. எங்களுடன் அவர்களுமே நடந்து வந்தார். பாரதிக்குச் சிலர்தேங்காய் உடைக்க லானார். பக்தியுடன் சூடத்தைக் கொளுத்த லானார். கைகூப்பி வழியெல்லாம் வணங்க லானார். கடவுளைப்போல் மாகவியைக் கருத லானார். 127