பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్ట్ర கழுதையும் கட்டெறும்பும் கட்டெ றும்பு ஊர்ந்து ஊர்ந்து கழுதை அருகில் சென்றதாம். கழுதைக் காலில் ஏறி ஏறிக் காதுப் பக்கம் போனதாம். காதில் புகுந்து மெல்ல மெல்லக் கடித்துக் கடித்துப் பார்த்ததாம். காள்கா ளென்று கழுதை கத்த கட்டெ றும்பு மிரண்டதாம்! காதி லிருந்து தரையை நோக்கிக் கர்ணம் போட்டுக் குதித்ததாம்! அந்தச் சமயம் பார்த்துக் கழுதை அதன்மேல் காலை வைத்ததாம். காலில் சிக்கிக் கொண்ட எறும்பின் கதை முடிந்து போனதாம்! 130