பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோழியின் பதில் பையன்: பெட்டைக் கோழி, பெட்டைக் கோழி, தட்டு நெல்லைத் தருகிறேன். இட்ட முட்டை எத்த னையோ? இன்றே எண்ணித் தந்திடு. கோழி: எட்டு நாளாய்த் தினமுமே இட்டு வைத்தேன் முட்டைகள். இட்ட முட்டை எட்டையும் எடுத்துக் கொண்டான் ஒருவனே. அவயங் காக்க நானுமே ஆசை கொண்டேன்; ஆயினும் அபயம் தந்த மனிதனே அனைத்தும் தின்று தீர்த்தனன் குஞ்சு பொரித்துப் பார்க்கவே கொண்டேன் ஆசை ஆயினும் மிஞ்ச வில்லை முட்டைகள்; முழுதும் அவனே தின்றனன். எட்டு முட்டை தின்றவன் என்னை என்ன செய்வனோ? விட்டு வைக்க வேண்டுமே. மிஞ்சு வேனோ நானுமே! 132