பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு மிக்க நிலவைக் கண்டு மகிழும் வேளையில் அங்கே வந்த மேகக் கூட்டம் அதை மறைத்ததால், அழுது விட்டான் சின்னத் தம்பி ஏங்கி ஏங்கியே! அழுத பிள்ளை சிரித்த தேனோ? அதையும் சொல்லுவேன்; மறைந்தி ருந்த மேகம் பின்னர் கலைந்து போனதால் வானில் நிலா முன்பு போலத் தெரிய லானது! மறைந்த நிலவை வானில் மீண்டும் கண்ட தம்பியின் மறைந்த சிரிப்பும் நிலவைப் போலத் திரும்பி வந்ததே!