பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோஜாப் பூ: அருமைப் பூவே, மல்லிகையே! அழகுப் பூவே, தாமரையே! பெருமை யூட்டும் தங்கரளி பிரிய மான சாமந்தியே! உங்களின் சண்டையைப் பார்த்ததுமே-என் உள்ளம் மிகமிக வாடியதே. இங்குள நாமெல்லாம் ஓரினமே-இதை ஏனோ மறந்தீர், தோழியரே? வண்ணத்தில் வேற்றுமை இருந்திடினும்-நம் வடிவத்தில் வேற்றுமை இருந்திடினும் எண்ணத்தில் வேற்றுமை இல்லாமல்-நாம் இணைந்து வாழுவோம் ஒற்றுமையாய். கண்டவர் உள்ளம் கவர்ந்திடவே-நல்ல காட்சி அளித்து விளங்குகிறோம். வண்டுகள் வயிறார உண்டிடவே-நாம் வாரித் தேனை வழங்குகிறோம். திருவிழா, திருமணம், பண்டிகைகள்-எல்லாம் சிறந்திட நாமும் உதவிடுவோம். நறுமணம் எங்கும் பரப்பிடுவோம்-என்றும் நன்மைகள் செய்யவே நாம்பிறந்தோம். 483