பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செடியும் சின்னத் தம்பியும் சின்னச் செடியை நட்டுநான் தினமும் தண்ணி ஊற்றினேன். நன்கு செடியும் வளர்ந்தது; நான்கு மீட்டர் உயர்ந்தது! சின்னத் தம்பி சேகரும் செடிபோல் வளர வில்லையே! இன்னும் குள்ள மாகவே இருக்க லாமோ? ஆதலால், சிறுவன் அவனைத் தினமுமே செடியின் அருகில் நிறுத்தியே தண்ணி விட்டேன் நாலுநாள். சளி பிடித்துக் கொண்டதே! 188