பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பட்டுப் போன்ற உடலுடனே
பலநி றத்தில் இறகுடனே
கட்டை யான குரலுடனே
களித்து நடனம் ஆடும்.அது

என்ன தெரியுமா?-தம்பி
என்ன தெரியுமா?

வட்ட மான முகத்துடனே
வளைந் திருக்கும் மூக்குடனே
முட்டை போன்ற கண்ணுடனே
வேட்டை ஆடும் இரவில்அது

என்ன தெரியுமா?-தம்பி
என்ன தெரியுமா?






விடைகள் ஒட்டகம், யானை, மயில், ஆந்தை

36