பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




எட்டு மாடிக் கட்டடம்

எட்டு மாடிக் கட்ட டத்தில்
ஏறி நிற்கிறேன்
இங்கி ருந்தே சென்னை முழுதும்
நன்கு பார்க்கிறேன்.

கற்ப காம்பாள் கோயில் அதோ
கண்ணில் தெரியுது.
கடற் கரையில் சின்னச் சின்ன
உருவம் தெரியுது.

கோட்டை முன்னால் கம்பம் ஒன்றில்
கொடி பறக்குது.
கூவம் ஆறு குறுக்கும் நெடுக்கும்
வளைந்து செல்லுது.


45