பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


மூலமாகவும், மேலாடையின் மூலமாகவும் வேறு இருவர் என் சாயலை அடையாளம் கண்டதாகச் சொல்லி விட்டனர். நீங்கள் என்முகச் சாயலை வைத்து நான்தான் அது என்று கண்டு கொண்டேன் என்று சொல்லுங்கள் என்று வேண்டிக் கொண்டார். சற்று நேரம் உருவப்படத்தை உற்றுப் பார்த்தப் பின் மூன்றாவது ஆள் “உங்கள் தாடியின் மூலம் அது நீங்கள்தான் என்று அடையாளம் காண்கிறேன்" என்றார்.

105. மென்மையான மண்டை

முடிதிருத்தும் நிலையம் ஒன்றில் பயிற்சியாளன் கத்தியினை முறையாகப் பயன்படுத்தத் தெரியாமல் முடிவெட்ட வந்தவனின் மண்டையில் பல வெட்டுக் காயங்களை ஏற்படுத்தினான். இதனால் சலிப்படைந்த அந்த முடிவெட்டும் பயிற்சியாளன் தன் முதலாளியிடம் "இவருடைய மண்டை மிகவும் மென்மையாக இருக்கிறது. இவருடைய மண்டை முற்றிலும் வளர்ச்சி அடையும் வரை காத்திருந்துதான் முடி வெட்ட முடியும்" என்று சென்னான்.

106. மயிரை மழித்த பின்

தாடி நரைத்த போது அதிலுள்ள வெள்ளை முடிகளை பிடுங்குமாறு தன் வைப்பாட்டியிடம் சொன்னான் ஒரு முதியவன். வெள்ளை முடியே அதிக அளவில் இருந்ததால் அவள் தாடியிலுள்ள ஒரு சில கறுப்பு மயிர்களைப் பிடிங்கினாள் வயோதிகன் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்த போது கொதித்தான். தன் ஆசைக் கிழத்தியை வசை மாறிப் பொழிந்தான். அவளோ "நீங்கள் பெரும்பான்மையைப் புறக்-