பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


கொதிக்கும் எண்ணெயில் ஏறியப்படவிருக்கிறாய்” என்றான் நரகதேவன். அப்போது எண்ணெய் கொதிக்கும் ஓசை கேட்டது. தீயினை அவன் கண்களால் கண்டான் கஞ்சன். அந்த நிலையிலும் அவன் பேரம் பேசினான். “எவ்வளவு எண்ணெய்! ஏன் இப்படி வீணக்குகிறீர்கள்? அந்த எண்ணெய்க்குரிய பணத்தை என்னிடம் தந்தால்; எண்ணெய் இல்லாமலேயே என்னை வறுக்க நான்

ஒப்புக்கொள்கிறேன்" என்றான் கஞ்சன்.

பின்னர் நரக தேவனின் ஏவலர்கள் அவனை இரும்பு முள்கரண்டியால் குத்திக் கொதிக்கும் எண்ணெயிலிட்டுக் கருக்கி வெளியே எடுத்து மீண்டும் நரக தேவனின் பார்வைக்குப் படைத்தனர். நரகதேவன் அதனைப் ஒரு முறை பார்த்துவிட்டுச் சொன்னான், இந்த மனிதன் ஒதுக்கப்பட வேண்டியவன். எனவே இவன் நாயாகவோ, பன்றியாகவோ மறுபிறவி எடுப்பானாக என்று சபித்தார்.

米米米米米米米米