பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த. கோவேந்தன், டிலிட்.,

19


இளைஞனோ தலை வணங்கி அவனுக்கு வணக்கம் செலுத்திவிட்டு “எனக்கு இத்தகைய மேன்மையும் உயர்வும். தரப்பட்டமைக்கு மிக்க நன்றி. எனினும் நான் என் வீடு சென்று என் மனைவியிடம் ஒப்புதல் கேட்டு வருகிறேன்” என்றான். இதனைக் கேட்ட அங்குக் குழுமியிருந்த அனைவரும் சிரித்த வண்ணம் கலைந்து சென்றனர்.

18. பாதிநாள் ஓய்வு

உயர்ந்த நிலையிலுள்ள ஒரு மனிதர் ஒரு முறை தாமரை மடத்திற்கு வருகை தந்தார். போதிய அளவு மது அருந்தியவுடன் கம்பர் காலத்துக் பாடல் ஒன்றைப் பாடத் தொடங்கினார். “மூங்கில் புதரின் வழியாய் செல்கையில் துறவியுடன் உரையாடினேன்; மற்ற வேளையில், பாதி நாள் ஓய்வில் இந்த நீந்தும் வாழ்வை மேற்கொண்டேன்” என்று பாடினார். பாடலைக் கேட்டு, விருந்து கொடுத்த துறவி